இ.எஸ்.ஐ. மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ஈரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் கூட்டத்தில் தீர்மானம்;
ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசனின் மகாசபை கூட்டமும், 46-வது ஆண்டு தொடக்க விழாவும் ஆசனூ ரில் நடைபெற்றது. இதற்கு அசோசியேசன் தலைவர் கே.எஸ்.தென்னரசு தலைமை தாங்கினார்.செயலாளர் ஆர். முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஆர்.நாகராஜன் நிதியறிக்கை சமர்ப்பித்தார். சட்ட ஆலோ சகர் ஏ.முத்துசாமி, முன்னாள் தலைவர் எம்.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசி னார்கள்.அதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:-அனைவரும் பயன்படும் வகையில் ஈரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண் /டும். சிவப்பு வண்ண பிரிவில் இருக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலை ஆரஞ்சு வண்ண |பிரிவாக மாற்றி வழங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆவன செய்ய வேண்டும். மாசுகட்டுப்பாட்டு வாரியஅலுவலகத்தில் இருந்து தொழிற்சாலையை ஆய்வு செய்துசெ இரு பிறகு அறை இருப்பின் அதை சரி செய்து கொள்ள 15 நாட் கள் அவகாசம் கொடுக்க வேண்டும். மாசுகட்டுப் பாட்டு வாரியத்தின் சார்பில் இணைப்புதுண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கும்போது, தொழிற்சாலைகளில் மின் காலஅவகாசம் இல்லாமல் நிரந்தரமாக வழங்க வேண் டும் என்பன உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.இதில் இணைச்செயலாளர் பி.சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்ன தாக இணைச்செயலாளர் எல்.சுரேஷ்குமார் வரவேற்று பேசினார்.முடிவில்இணைப் பொருளாளர் வி.ராஜேந்தி ரன் நன்றி கூறினார்.