நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்யக்கோரியும், நெல்லையில் 31ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தை அவதூறாக பேசிய கிருஷ்ணாசாமி, அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி மீது வழக்கு பதிய வேண்டும் என மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மனு அளித்தனர். இதில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.