கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று (ஆக.,1) கடலூர் பகுதியில் 100.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.