கார் - டூவீலர் - ஆம்னி வேன் மோதி விபத்து
வேடசந்தூர் அருகே கார் - டூவீலர் - ஆம்னி வேன் மோதி விபத்து;
திண்டுக்கல் வேடசந்தூர், அரசு டெப்போ அருகே உள்ள சிற்றோடை பாலம் அருகே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி நிற்காமல் சென்று ஆம்னிவேன் மீது கார் மோதி அருகிலுள்ள பள்ளத்தில் இறங்கியது. கார் டிரைவர் அங்கிருந்து மாயமானார். இருசக்கர வாகனத்தில் வந்தது விக்னேஸ்வரன், ஆம்னி வேனில் வந்த கோவிந்தராஜ்,முரளி, திருப்பதி ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.