தந்தையை கொன்ற மகன் கைது

மதுரை சமயநல்லூர் அருகே தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-08-03 01:46 GMT
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டப்புளிநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(65) என்பவர் நேற்று (ஆக.2) அதிகாலை வீட்டின் முன்பு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் ராஜேந்திரன் உயிரிழந்து கிடந்தார். சமயநல்லூர் போலீசார் அவரது உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது . இதனால் சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமாரிடம் (35) போலீசார் விசாரித்ததில் நேற்று முன் தினம் (ஆக.1) இரவு குடிபோதையில் இருந்த அவர் சொத்து தகராறில் தந்தையை கீழே தள்ளிவிட்டு கட்டையால் தலையில் தாக்கியதாக கூறியதாக தெரிகிறது. இதனால் கொலை வழக்கு பதிந்த சமயநல்லூர் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Similar News