கணவர் மாயம் . மனைவி புகார்
மதுரை பேரையூர் அருகே கணவர் மாயம் என மனைவி புகார் அளித்துள்ளார்;
மதுரை மாவட்டம் பேரையூர் உத்தபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கணேசனின் மகன் கார்த்திக்( 28 ) என்பவர் கடந்த 1ம்தேதி காலை 8 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடி கிடைக்கவில்லை என்பதால் இவரது மனைவி கோமதி நேற்று மாலை எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நபரை தேடி வருகின்றனர்.