விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது;

Update: 2025-08-05 15:02 GMT
செ.வெ.எண்: நாள்: 05.08.2025 விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 12.08.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் (பொ), சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும், கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கும் விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, அறிவுறுத்தியுள்ளார்.

Similar News