*ஆண்டிமடம் டாஸ்மாக் கடை அருகே அரசு பஸ் மோதி மீன்சுருட்டி தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.*

*ஆண்டிமடம் டாஸ்மாக் கடை அருகே அரசு பஸ் மோதி மீன்சுருட்டி தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2025-08-06 09:22 GMT
அரியலூர், ஆக.6- ஆண்டிமடம் டாஸ்மாக் கடை அருகே அரசு பஸ் மோதி மீன்சுருட்டி தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (32) இவர் மீன்சுருட்டி தலைமை காவலராக வேலை பார்த்து வரும் நிலையில், ஆண்டிமடம் அரசு டாஸ்மாக் கடை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்: ஆண்டிமடம் போலீசார் விசாரணை*

Similar News