மனம் வளர்ச்சி குன்றிய நபர் தற்கொலை.

மதுரை அருகே மன வளர்ச்சிக்கு குன்றிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-08-06 10:10 GMT
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் கல்யாணசுந்தரத்தின் மகன் சிவராஜன்( 40) என்பவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மன வளர்ச்சி இல்லாதவர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக.4) மாலை 4 மணி அளவில் வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். அவரை அங்குள்ளவர்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் விஜயலட்சுமி சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

Similar News