அரவிந்த் மருத்துவமனை நிறுவன குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்
மதுரை அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் மறைவை ஒட்டி அவரது குடும்பத்தினருக்கு இன்று அமைச்சர் பன்நீர் தியாகராஜன் ஆறுதல் கூறினார்;
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவரும் மதுரையின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் நம்பெருமாள்சாமி அவர்கள் சமீபத்தில் மறைவுற்றதையொட்டி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமது தாயாரும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அறங்காவலர் குழு தலைவருமான ருக்மணி பழனிவேல்ராஜன் அவர்களுடன், மருத்துவரின் இல்லத்திற்கு இன்று (ஆக.6) சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.