மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடியான மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் திறந்து வைத்தார்.
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் அருகில் மகளிர் திட்டம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடியான மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இன்று(08.08.2025) திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி விற்பனை பொருட்களை பார்வையிட்டார்.;
பெரம்பலூர் மாவட்டம் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடியான மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் அருகில் மகளிர் திட்டம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடியான மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இன்று(08.08.2025) திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி விற்பனை பொருட்களை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்திடும் பொருட்டு, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் “மதி அங்காடி” அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்தை தொடர்ந்து, பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்திடும் பொருட்டு மதுரகாளியம்மன் கோவில் அருகில் குளிர்சாதன வசதியுடன் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் “மதி அங்காடி” கட்டப்பட்டது. இந்த மதி அங்காடி இன்று முதல் திறக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் பயன்பெறுவர். இந்த அங்காடியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கைவினை பொருட்கள், ஜுட் பேக், அலங்கார நகைகள், வயர் கூடை. பூஜை கூடை, நாட்டுச் சர்க்கரை, செயற்கை ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும். இன்று திறக்கப்பட்டுள்ள அங்காடியை மகளிர் சுய உதவி விற்பனை பிரதிநிதி முறையாக பராமரித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கோபாலகிருஷ்ணன் ,மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், சங்கர், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தசெல்வக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.