டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலி
டூவீலர் மீது கார் மோதி விபத்தில் வழக்கறிஞர் பலி;
காரியாபட்டி அருகே டூவீலரில் சாலையை கடக்க முயன்ற வழக்கறிஞர் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி ஜெகன் இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று பணி முடித்து கம்பிக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக காரியாபட்டியிலிருந்து தூத்துக்குடி - மதுரை சாலையில் கம்பிக்குடி விளக்கில் சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ஒன்று அதிவேகமாக வந்து வழக்கறிஞர் குட்டி ஜெகன் ஓட்டி வந்த டூவீலரில் மோதியதில் குட்டி ஜெகன் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வழக்கறிஞர் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவர் மீது ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.