நிற்காமல் சென்ற பேருந்து பள்ளி மாணவர்கள் அவதி
திண்டுக்கல்லில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து - பள்ளி மாணவர்கள் அவதி;
திண்டுக்கல் டு ஆலம்பட்டி பேருந்தில் காலை 7:40 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக பில்லமநாயக்கன்பட்டி மேட்டில் பள்ளி மாணவர்கள் காத்திருந்தனர் ஆனால் பேருந்து ஓட்டுநர் அந்த நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தவில்லை. அதேபோல் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தவில்லை. ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாணவர்களை தனது ஆட்டோ ஏற்றிக்கொண்டு பேருந்தை துரத்தி சென்று அடுத்த பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களை பஸ்ஸில் ஏற்றி விட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.