நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32வது பட்டமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் .அப்பொழுது நாகர்கோவிலை சேர்ந்த மாணவி ஜூன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெறுவதை மறுத்து துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தை வாங்கி கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.