கோவில் கொடை விழாவில் துணை மேயர் பங்கேற்பு
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாவட்டம் மலையன்குளம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 15) கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். துணை மேயர் ராஜுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.