விசைத்தறி மனைவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை
குமாரபாளையம் அருகே மைக்ரோ பைனான்ஸ் கடனை திரும்ப செலுத்த முடியாமல் விசைத்தறி தொழிலாளி நாகராஜ் மனைவிக்கு தனது குழந்தைகளை சிறப்பாக வளர்க்க கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை குமாரபாளையம் போலீசார் விசாரணை;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாலக்கரை பகுதி சேர்ந்த நாகராஜ் விசைத்தறி கூலி தொழிலாளி தற்பொழுது விசைத்தறி தொழில் நழிவடைந்து இருப்பதால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று தனது குடும்பத்தில் நடத்தி வந்துள்ளார் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கந்து வட்டிக்கு வாங்கிய தொகையை திரும்ப செலுத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டதால் கடந்த வரம் கடன் கொடுத்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனர் ஊழியர்கள் மாடு மற்றும் கந்துவட்டி வழங்கிய நிதி நிறுவன ஊழியர்கள் நாகராஜ் சந்தித்து கடனை திரும்ப செலுத்த வலியுறுத்தியுள்ளனர் அப்பொழுது அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர் அதேபோல் இந்த வாரம் கடனை இன்று காலை 11 மணிக்குள் செலுத்த வேண்டும் என மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர் இதனால் இன்று கடனை திரும்ப செலுத்த பல நண்பர்களிடம் பணம் கேட்கும் கிடைக்காத சூழ்நிலையில் மனம் உடைந்து நாகராஜ் தனது மனைவி மீனா இரண்டு பெண் குழந்தைகளை பால்வாடி பள்ளிக்கு விட சென்ற பொழுது வீட்டில் இருந்த நாகராஜ் இன்று மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்களால் விரட்டப்படுவோம் என அஞ்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த மீனா தனது கணவன் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சத்தமிட்டதை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகராஜ் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார் இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் நாகராஜன் வீட்டிற்கு சென்று சோதனை செய்த பொழுது நாகராஜ் தனது மனைவி மீனாவிற்கு என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல கந்துவட்டி கொடுமையும் மைக்ரோ பைனான்ஸில் பெற்ற கடன் திரும்ப செலுத்த முடியாத நிலையில் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எனது இரண்டு மகள்களையும் தந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்து வளர்க்க வேண்டும் என்றும் அப்பா எங்கே என்று குழந்தைகள் கேட்டால் கோவிலுக்கு போய் இருப்பதாக கூறி வளர்க்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்திருந்தது சிக்கியது இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்