எத்தனை பிள்ளைகளை நாய் கடிக்குது தெரியுமா? ஜி பி முத்து காட்டம்.
எத்தனை பிள்ளைகளை நாய் கடிக்குது தெரியுமா? ஜி பி முத்து காட்டம்.;
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் அதிக அளவில் நாய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினம்தோறும் ஏராளமான இடங்களில் நாய்கள் கடித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காயமடைந்து அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு நாய்கள் பாதுகாவலர்களும் நாய் அபிமானிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாய் அபிமானிகளும் நாய் எதிர்ப்பாளர்களும் தங்களது பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான துணை நடிகரும் பிக் பாஸ் பிரபலமான திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்த ஜிபி முத்து நாய்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்து யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் பேசுகையில் எத்தனை பிள்ளைகளை நாய்கள் கடிக்குது தெரியுமா. முட்டாள்தனமா பேசுறீங்க. உங்க பிள்ளைங்கள நாய் கடிச்சு கொதறி அந்த பிள்ளைகளுக்கு ரேபிஸ் நோய் வந்தா அப்போதான் உங்களுக்கு நெஞ்சு வலிக்கும். இந்தா பாருங்க என்னோட பையனோட கன்னத்தை நாய் கடிச்சு கொதறி வச்சிருக்கு. பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் பெத்தவங்களுக்கு தான் தெரியும் வலி. இந்த மாதிரி பிள்ளைகளுக்கு ஆச்சுன்னா யாரு பாப்பா. உங்களுக்கு நாய் வளர்க்கணும்னு ஆசைப்பட்டால் புதுசா வீடு கட்டுங்க நல்ல பெரிய காம்பவுண்ட் கட்டி அந்த காம்பவுண்டுக்குள்ள நாய் தெரு நாய் எல்லாத்தையும் போட்டு வளருங்கள். பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் நம்ம நெஞ்சு தாங்காது. தினமும் எத்தனை பேரை துரத்துது எத்தனை பிள்ளைகளை கடிக்குது. ஒரு தெருவுல 25 ல இருந்து நாய் வரை இருக்கு ராத்திரி வேலையை முடிச்சிட்டு வர்றவன் நாய் துரத்தினால் எங்க உளுந்து சாவுவான். நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம். நாய் முக்கியம் கிடையாது ஒரு நாய் வந்து காட்டு மிருக மாதிரி பிள்ளைகளை கடிக்க ஆரம்பிச்சுட்டேன்னா அப்படி ஒரு நாய் நமக்கு தேவையே இல்லை. அறிவுகெட்டு போய் பேசுகிறீர்களா. நாய் வளர்க்க வேண்டும் என்றால் வீட்டில் கட்டி போட்டு சோத்தை போட்டு வளங்கள். இப்படி அறிவு கெட்ட தனத்தில் பேசும் நீங்கள் ஒருவர் கூட ஒரு நாய்க்கு சோறு போட மாட்டீர்கள் தெரியுமா. தொடர்ந்து கையில் ஒரு பூனையை வைத்துக்கொண்டு நாங்களும் பிராணிகள் வளர்ப்பவர்கள் தான் ஆனால் தேவைக்கு மட்டுமே வளர்க்க வேண்டும். நமது குடும்பத்திற்கு அது விரோதமாக இருந்தால் அதை விட்டுளியுங்கள் என்று பேசி பதிவேற்றம் செய்துள்ளார். இவரின் கருத்திற்கு பலரும் ஆதரவு தந்தாலும் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.