அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி அனைவருக்கும் பழைய டென்ஷன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது வலிகளை சினிமா பாடல் மூலமாக வலியுறுத்தி இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், வாரிசுப் பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையினை பட்ஜெட்டின் நிதி ஒதுக்கிட வேண்டும், 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வு காலப் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வுகால பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும், ஒப்பந்த பலன்களை வழங்கி ஊதியத்தை உயர்த்திட வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது வலிகளை சினிமா பாடல் மூலம் இரண்டாம் நாள் காத்திருப்பு பேராட்டத்தை தொடங்கினர் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அரசுக்கு எதிராக இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்