ராசிபுரத்தில் நெகிழி பொருட்கள் பறிமுதல்...
ராசிபுரத்தில் நெகிழி பொருட்கள் பறிமுதல்...;
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பெயரில் இராசிபுரம் நகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் கடைவீதியில் உள்ள பல்வேறு கடைகளில் நெகிழிகள் பறிமுதல் செய்தனர். ரூபாய்..7000.00 அபராதமும் 25 கிலோ நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தூய்மை அலுவலர் மு. செல்வராஜ் தூய்மை ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் தூய்மைப்பணி பரப்புரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடைகளில் நெகிழிகள் அதிக அளவில் பயன்படுத்த கூடாது என தெரிவித்தனர்..