ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் ...*
ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் ...*;
ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் ... விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது .மேலும் இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு அனுமதி எனவும், பக்தர்கள் மலையில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.