சிவகாசியில் மழையில் ஒழுகும் அரசுப் பேருந்து!!
சிவகாசியில் மழையில் ஒழுகும் அரசுப் பேருந்து!!;
சிவகாசியில் மழையில் ஒழுகும் அரசுப் பேருந்து!! விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனிடையே, சிவகாசியிலிருந்து விருதுநகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தின் மேற்க்கூரை சேதமடைந்திருந்தததால், அதன் வழியாக மழைநீர் ஒழுகி பேருந்து முழுவதும் ஈரக்காடாக காட்சியளித்தது. இதன் காரணமாக பேருந்தில் எற பயணிகள் தயக்கம் காட்டியதால் இருக்கைகள் காலியாக வெறிச்சோடிய நிலையில், பேருந்து இயக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது. எனவே அரசு பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.