தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கிய மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 25வது வார்டு பகுதியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 25) தனது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.