காவிரி கரையோரம் முதியவர் சடலம் மீட்பு

காவிரி கரையோரம் முதியவர் சடலம் போலீசார் விசாரணை.;

Update: 2025-08-25 13:09 GMT
பரமத்தி வேலூர், ஆக. 25: பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அப்போது, காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக வந்தவர்கள் முதியவர் இறந்து கிடப்பதாக வேலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் இறந்து கிடந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

Similar News