திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேக் முகமது இலியாஸின் கார் கண்ணாடியை இன்று (ஆகஸ்ட் 26) மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.