நள்ளிரவு நேரத்தில் மாடுகள் கூட்டமாக செல்கின்றன
திண்டுக்கல்லில் நள்ளிரவில் மாடுகள் ஊர்வலம்;
திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் மாடுகள் கூட்டமாக செல்கின்றன. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மாடுகள் தங்கள் மீது முட்டி விடுமோ என்ற அச்சத்தில் பயந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். மேலும் கார்களில் வருபவர்கள் தங்கள் வாகனத்தின் மீது மோதி விடுமோ? என்று செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள் இடம் -: வாணி விலாஸ் சிக்னல், காந்திஜி அரசு பள்ளி முன்புறம் குறிப்பு -: நேற்று முன்தினம் அஞ்சலி பைபாஸ் அருகே கார் மோதி பசுமாடு பலியானது.