நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் விடுமுறை

05.09.2025 (வெள்ளிக் கிழமை) அன்று நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தகவல்;

Update: 2025-09-02 09:56 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல். 1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3. எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 05.09.2025 (வெள்ளிக் கிழமை) நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News