தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருநெல்வேலி மாவட்டம் சார்பில் 2025ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால ஒத்திகை பயிற்சி நாளை (செப்டம்பர் 3) தாமிரபரணி ஆற்றங்கரையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.