காவேரிப்பட்டணம் அருகே சாலை ஓரகல்லில் டூவீலர் மோதி டிரைவர் உயிரிழப்பு.
காவேரிப்பட்டணம் அருகே சாலை ஓரகல்லில் டூவீலர் மோதி டிரைவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40) வேன் டிரைவரான. இவர் கடந்த 31-ஆம் தேதி அன்று காவேரிப்பட்டணம் செல்லம்பட்டி சாலையில் உள்ள பேருஅள்ளி பாலம் அருகே டூவீலரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரமாக இருந்த கல்லில் டூவீலர் மோதி கவிழ்ந்தது. இதில் சதீஷ்குமார் படுகாயத்துடன் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.