மகள் மாயம். தாயார் புகார்.
மதுரை பேரையூர் அருகே இளம்பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மதுரை பேரையூர் அருகே மெய்னுத்தம்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் முத்துலட்சுமி( 20) என்பவர் கடந்த 30ஆம் தேதி இரவு 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (செப்.3) மதியம் சாப்டூர் காவல் நிலையத்தில் அவரது தாயார் இதயக்கனி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.