பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2025-09-13 12:21 GMT
சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோயில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவிலில் ஆண்டுவிழாவையொட்டி, காவிரி ஆற்றில் தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு யாகங்கள் நடந்தப்பட்டு, சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, பக்தி பஜனை பாடல்கள் பாடினார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Similar News