தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்;

Update: 2025-09-15 12:34 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (15.09.2025) நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் கல்வியைத் தொடர உதவும் வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த திட்டத்தின் கீழ், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கு, ஒருவருக்கு ரூ.75,000/- வீதம் விபத்து காப்பீடு நிதியுதவி ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. இரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு. சிதம்பரநாதன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

Similar News