சர்வதேச போட்டியில் வெண்கலம் வென்ற மாணவிக்கு கரூரில் பாராட்டு.

சர்வதேச போட்டியில் வெண்கலம் வென்ற மாணவிக்கு கரூரில் பாராட்டு.;

Update: 2025-09-25 09:55 GMT
சர்வதேச போட்டியில் வெண்கலம் வென்ற மாணவிக்கு கரூரில் பாராட்டு. தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற 9வது ஆசிய சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும், நம் கரூருக்கும் பெருமை சேர்த்த பரணி வித்யாலயா பள்ளி 12ம் வகுப்பு மாணவி யாழினி ரவீந்திரன் இன்று கரூர் திரும்பினார யாழினி அவரது பெற்றோர் ரவீந்திரன், தீபா ஆகியோரை பள்ளியின் சார்பாக ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர், ஆசிரியர்கள் தேசியக்கொடியசைத்து அன்புடன் வரவேற்றனர். மாணவிக்கு பாராட்டு விழா பரணி கல்விக் குழும தாளாளர் மோகனரங்கன் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,இந்நிகழ்வில் செயலர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் முனைவர்.ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா , ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின் இருபால் ஆசிரியப் பெருமக்கள் யாழினியன் பல்வேறு தேசிய, சர்வதேச விளையாட்டு சாதனைகளைப் பாராட்டிப் பேசினர்.

Similar News