அரசு கட்டிடங்கள் திறப்பு விழா,எம்எல்ஏ பங்கேற்பு

அரசு கட்டிடங்கள் திறப்பு விழா,எம்எல்ஏ பங்கேற்பு;

Update: 2025-09-25 14:56 GMT
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் சிறுகளதூர், பாக்கம், ஜமீன் எண்டாதூர், ஜமீன் பூதூர், நெட்ரம்பாக்கம் ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுகளதூர், பாக்கம், ஜமீன் எண்டாதூர், ஜமீன் பூதூர், நெட்ரம்பாக்கம் பகுதியில் கலையரங்க கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களிடம் மனு அளித்தனர்..அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 52.49 இலட்சம் நிதி ஒதுக்கி சிறுகளதூர், ஜமீன் எண்டாதூர், ஜமீன் பூதூர் ஆகிய பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை கட்டிடம், பாக்கம் பகுதியில் கலையரங்கம், நெட்ரம்பாக்கம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பணி மேற்கொண்டு அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார். உடன் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் K.கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் V.கார்த்திகேயன்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

Similar News