மேல்மருவத்துாரில் காதலர்களை, கத்திரிக்கோலால் குத்திய முன்னாள் காதலன்
மேல்மருவத்துாரில் காதலர்களை, முன்னாள் காதலன் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம்;
மேல்மருவத்துாரில் காதலர்களை, முன்னாள் காதலன் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம், பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் பகுதியில் வசிப்பவர், செல்வி,22, பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பிரீ பையர் கேம் மூலமாக, கடலுாரைச் சேர்ந்த சரவணன், 22, பழக்கமாகியுள்ளார். காதலியை பார்க்க மேல்மருவத்துாருக்கு சரவணன் வந்துள்ளார். இதனை அறிந்த, செல்வியின் முன்னாள் காதலனான திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த எழிலரசன், 22, என்பவர் செல்வியின் வீட்டிற்கு சென்றுள்ளார். முன்னாள் காதலியின் வீட்டுக்கு வந்து, கோபத்தில் கத்தரிக்கோலால் சரவணன் உடலில் நான்கு இடங்களில் குத்தி கிழித்துள்ளார்.மேலும், காதலி செல்வியையும் தாக்கியுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மேல்மருவத்துார் போலீசார், செல்வி மற்றும் சரவணன் ஆகியோரை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின், எழிலரசனை கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.