வேப்பனப்பள்ளி அருகேபஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு.

வேப்பனப்பள்ளி அருகேபஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு.;

Update: 2025-10-10 01:33 GMT
கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி அருகேயுள்ள பண்ணப்பள்ளி பகுதியை சோ்ந்த திம்மராஜின் மனைவி சிவசத்யா(25) இவா்களுக்கு 7 மாத குழந்தை உள்ள நிலையில் நேற்று தனது தந்தை முனிராஜியுடன் சென்றார். அப்போது நாச்சிகுப்பம் பிரிவு சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வந்த தனியார் பஸ் மோதியதில் படு காயமடைந்த சிவசத்யா சம்வ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து அவரது உடலின் முன்பு சிவசத்யாவின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பனப்பள்ளி போலீசார். மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்து கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியலில் கைவிடப்பட்டது.

Similar News