ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி வளர்ச்சிக்கு மட்டும் முப்பது கோடி ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார் தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி வளர்ச்சிக்கு மட்டும் முப்பது கோடி ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார் தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.;
ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி வளர்ச்சிக்கு மட்டும் முப்பது கோடி ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார் தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். கடந்த அக்டோபர் 2ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டு இன்று தமிழக முழுவதும் நடைபெற்றது. தமிழக முழுவதும் இன்று 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக முன் நின்று நடத்தினார். இந்த கூட்டத்தின் போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பொறுப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்தந்த கிராமங்களில் உள்ள குறைகள் குறித்தும் குறிப்பிடுமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறைகள் குறித்து காணொளியில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் இருந்து பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கொண்டனர். கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்டாள் கோவில் கிழக்கு ஊராட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 17 கோடி ரூபாய்க்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக முதலமைச்சர் நிதிகளை ஒதுக்கி கொடுத்து அதன் மூலம் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் மேலும் 13 கோடி ரூபாய்க்கு பணிகளை நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாத காலத்திற்கு உள்ளாக இதற்கான நிதிகள் தமிழக முதலமைச்சரிடம் இருந்து பெறப்பட்டு பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் குறிப்பிட்ட இந்த ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு மட்டும் ரூபாய் 30 கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.