பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்

குமாரபாளையம் அருகே பள்ளியில் மேற்கூரை இடிந்து விடுவதால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் நூதன போராட்டம்.;

Update: 2025-10-17 13:14 GMT
குமாரபாளையம் அருகே உள்ள வளையக்கரனூர் என்ற பகுதியில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 80 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்தப் பள்ளியின் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளை கடந்துள்ளது கடந்த 2021 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் மட்டும் செய்யப்பட்டது இந்நிலையில் கடந்த சில தினங்களாக பகுதியில் மழை பெய்த வண்ணம் உள்ளதால் பள்ளியின் மேற்கூறை நேற்று பள்ளி நடந்து கொண்டிருந்த பொழுது இடிந்து விழுந்துள்ளது இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டனர் வீட்டுக்கு சென்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பள்ளிக்குச் செல்ல மாட்டோம் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து வருவதால் அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் இதனையடுத்து இன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Similar News