வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-11-04 11:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட ஒட்டமெத்தை மற்றும் வெடியரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர்  வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950 ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிற பொருத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர். ஒவ்வாரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு 10 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 165 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. BLO, BLO Supervisor & BLA-களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, இன்று  முதல் டிசம்பர் 04, 2025 வரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் மற்றும் கணக்கடுப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் 09.12.2025 அன்று வெளியிடப்படும். கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் 09.12.2025 முதல் 08.01.2026 வரை. இவ்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-னை பயன்படுத்தி அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர்  தலைமையில் 03.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

Similar News