நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இந்த வருடத்தின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம்!
ஆஞ்சநேயருக்கு இந்த வருடத்தின் (2025-2026) முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் நவம்பர் -19 புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.;
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நிர்வாகத்தால் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இந்த வருடத்தின் (2025-2026) முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் நவம்பர் -19 புதன்கிழமை நடைபெற்றது, மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை, சுமார் 110 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.