திண்டுக்கல், பழனிபைபாஸ் ராமையன்பட்டியில் திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட போது திருமணத்தை மீறிய உறவால் (கள்ளக்காதல்) இந்த கொலை நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது