விடியல் ஆரம்பம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் திருவள்ளு;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு, அவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. குரலிசை பங்கஜம் பங்கேற்று திருக்குறளை இசை வடிவில் பாடி விளக்கமளித்தார். இதில் சமூக ஆர்வலர்கள் காமராஜ், அன்பழகன், கேசவமூர்த்தி, ராஜகோபால், தீனா, ஜமுனா, சித்ரா, பகலவன், ரவி, உள்பட பலர் பங்கேற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் திருக்குறள் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.