திண்டுக்கல் அருகே தொழிலாளியிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
Dindigul;
திண்டுக்கல், நல்லாம்பட்டியை சேர்ந்த சக்தி இவர் A.வெள்ளோடு ரோடு ஒலி நகர் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல், வேடப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரவீன்(24) என்பவர் உடைந்த பீர்பாட்டிலைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பறித்து சென்றதாக அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ** பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்