கொட்டரை கிராமத்தில் 09.07.2025 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில், எதிர்வரும் 09.07.2025 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.;
பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை கிராமத்தில் 09.07.2025 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில், எதிர்வரும் 09.07.2025 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொட்டரை கிராம நிருவாக அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களிடம் வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.