மின்வாரியத்தில் அரசாணை 100 ன்படி 12. 2 .2024 ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும்,

மின்வாரியத்தில் அரசாணை 100 ன்படி 12. 2 .2024 ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும், ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை;

Update: 2025-07-19 17:26 GMT
மின்வாரியத்தில் அரசாணை 100 ன்படி 12. 2 .2024 ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் உமியர் மத்திய அமைப்பு - CITU ,தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் S.அகஸ்டின் ,ஓய்வு பெற்ற நல அமைப்பின் வட்ட தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற அமைப்பின் வட்டச் செயலாளர் . ராஜகுமாரன், ஓய்வு பெற்ற அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம் ,கருணாநிதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மணி தினேஷ், சேட்டு, ஆறுமுகம், அண்ணாதுரை, கண்ணையன், இளங்கோவன், கோபாலகிருஷ்ணன், அஸ்வின் குமார் ,தனபால் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

Similar News