அரக்கோணம் ரயில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்-போலீஸ் விசாரணை!
அரக்கோணம் ரயில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்-போலீஸ் விசாரணை!;
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப் பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ் பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போலீசார் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்த போது அதில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து காஞ்சீபுரத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.