செப்டம்பர் 12ல் குமாரபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம்

குமாரபாளையம் பகுதியில் செப். 12ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2024-09-10 13:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செப். 12ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் செப். 12ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை குமாரபாளையம்நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்டிஅக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News