உளுந்துார்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோவில் குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதி ரூ.1.45 கோடி மதிப்பீட்டில், இந்த குளம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த பணியை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் துவக்கி வைத்தார்.நகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், டேனியல்ராஜ், கலாசுந்தரமூர்த்தி, சாந்தி மதியழகன், மாலதி ராமலிங்கம், ஜெயபால், கோபி, அறங்காவலர் குழு தலைவர்கள் சிவராஜ், செல்லையா, பிரகாஷ், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.