ஆம்பூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த வீடு 1.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் தங்க நகை தீயில் எரிந்து நாசம்.

ஆம்பூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த வீடு 1.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் தங்க நகை தீயில் எரிந்து நாசம்.;

Update: 2025-02-12 13:09 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த வீடு 1.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் தங்க நகை தீயில் எரிந்து நாசம். உமராபாத் காவல்துறையினர் விசாரணை... திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் குப்பன் இவரது வீட்டில் இன்று பிற்பகல் திடீரென மின்கசிவினால் டிவி மற்றும் குளிர்சாதன பெட்டி தீப்பற்றி எரிந்துள்ளது, இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் மற்றும், உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் , உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைப்பதற்குள் வீடு முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்ததில், வீட்டிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் பணம், 3 சவரன் தங்கநகை மற்றும், ஆடைகள், ஆவணங்கள், மற்றும் வீட்டிலிருந்து பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளன, அதனை தொடர்ந்து இந்த தீவிபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்... மேலும் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Similar News