கரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1569 வழக்குகளுக்கு தீர்வு.

கரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1569 வழக்குகளுக்கு தீர்வு.

Update: 2024-09-14 15:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1569 வழக்குகளுக்கு தீர்வு. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு & தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதனை முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இதில் கரூரில் நான்கு அமர்வுகளும், குளித்தலையில் இரண்டு அமர்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வு, கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வு என மொத்தம் 8 அமர்வுகள் நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 1693 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு,1569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட இந்த வழக்குகள் மூலம் ரூ.13,77,22,117- வழங்கப்பட்டது. இந்த பணியில் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் வழக்காடிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் (பொறுப்பு) செயலர் & சொர்ணகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செய்திருந்தனர்.

Similar News