தனியார் பஸ்களுக்கு இடையே பஸ் எடுப்பது தொடர்பாக தகராறு

தனியார் பஸ்களுக்கு இடையே குறிப்பிட்ட நேரத்தில் பஸ் எடுப்பது தொடர்பாக தகராறு

Update: 2024-09-18 10:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கொடைரோடு அருகே தனியார் பஸ்களுக்கு இடையே குறிப்பிட்ட நேரத்தில் பஸ் எடுப்பது தொடர்பாக நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டனர்.மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அடுத்தடுத்து புறப்பட்ட இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றன்பின் ஒன்று முந்துவதில் வேகம் காட்டி வந்தன. மதுரை - திண்டுக்கல் ரோட்டில் அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே இரண்டு பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற நிலையில், பின்னால் வந்த தனியார் பஸ் ஆதரவாக எதிரே வந்த அதே நிறுவனத்தை சேர்ந்த தனியார் பஸ் திடீரென ரோட்டை மறைத்து நின்றது. அப்போது பஸ்கள் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதும் சூழ்நிலை உருவானது. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர்.இதன் பின் பஸ் கண்டக்டர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பயணிகள்,கிராமத்தினர் டிரைவர், கண்டக்டர்களை கண்டித்ததால் அவரவர் பஸ்களை ஓட்டி சென்றனர்.மதுரை, திண்டுக்கல் மார்க்கத்தில் தனியார் பஸ்கள் இடையே பஸ் எடுக்கும் நேரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவதால் இதன் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News